தந்தை இறந்த துக்கத்தில் மகன் தீக்குளித்து சாவு
சிவகாசியில் தந்தை இறந்த துக்கத்தில் தீக்குளித்த மகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
சிவகாசியில் தந்தை இறந்த துக்கத்தில் தீக்குளித்த மகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
சிவகாசி சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கூடலிங்கம் (26). இவரது தந்தை மூர்த்தி கடந்த ஜூலை 22 ஆம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் கூடலிங்கம் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் கடந்த 27 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.