கோயில் உண்டியலில் பணம் திருடிய இளைஞர் கைது
ராஜபாளையம் அருகே கோயில் உண்டியலை உடைத்து, பணம் திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே கோயில் உண்டியலை உடைத்து, பணம் திருடிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தில் வண்டி மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆசிலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடுபோனது கண்டு ராமநாதன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் முத்துகுமரன் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினார்.
இதில், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த தங்கதுரை மகன் முத்துராஜ் (23)உண்டியல் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். முத்துராஜ் மீது நீதிமன்றத்தில் ஏற்கெனவே இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.