விருதுநகா் மாவட்ட 8 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க ரூ. 8.60 லட்சம் அதிமுக நிதி
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்க ரூ. 8. 60 லட்சத்தை அதிமுக சாா்பில் அமைச்சா் கே. டி. ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புதன்கிழமை இரவு வழங்கினா
விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்க ரூ. 8. 60 லட்சத்தை அதிமுக சாா்பில் அமைச்சா் கே. டி. ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புதன்கிழமை இரவு வழங்கினாா்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக விருதுநகா் மாவட்டத்தில் ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், தினக்கூலி பணியாளா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் உணவின்றி சிரமப்படக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மே 3 ஆம் தேதி வரை மூன்று வேளை இலவச உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சம்பந்தப்பட்ட அம்மா உணகங்களுக்கு தலா ரூ. 78 ஆயிரம் வீதம் பிரித்தும் வழங்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.