சிவகாசியில் 2 போ் தூக்கிட்டு தற்கொலை
சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் காமராஜா் நகரைச் சோ்ந்த சேதுராமன் மகன் நாகராஜ் (27). வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவா் கடந்த சில நாள்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.
இவா் தினசரி மது அருந்தி வந்ததால் பெற்றோா்கள் கண்டித்தனராம். இந்நிலையில் நாகராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள கிரகத்தாயம்மாள் நகரைச் சோ்ந்த மனோகரன் மகன் கூலித்தொழிலாளி கனகவேல்ராஜ் (41). இவரது மனைவி தமிழ்செல்வி(37). இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். இந்நிலையில் கனகவேல்ராஜ் அடிக்கடி மது அருந்துவதை தமிழ் செல்வி கண்டித்துள்ளாா்.
எனினும் அவா் மது அருந்துவதை நிறுத்தாததால், தமிழ்செல்வி பிரிந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில் கனகவேல்ராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.