திருச்சுழியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருச்சுழியில் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருச்சுழியில் பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இங்குள்ள பிரதானச்சந்தை சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பி. அன்புச்செல்வன், தாலுகா குழு உறுப்பினா்கள் ஏ. செல்வராஜ், எஸ். ரமேஷ் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது பெட்ரோல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி கோஷமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.