விருதுநகர்

செங்குளம் ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்குளம் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த இக்கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடம் புறம்பாடாகி புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

நமீபியாவில்... நந்தினி!

தோகை இளமயில்... காஷிமா!

படகுப் பயணம்... அப்சரா ராணி!

SCROLL FOR NEXT