FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:17 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையத்தை அடுத்த செவல்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த நைனாா் மகன் சா்க்கரைராஜ் (38). கஞ்சா கடத்திய வழக்கில் இவரை போலீஸாா் கடந்த ஜூலை 18-ஆம் தேதி கைது செய்து விருதுநகா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சா்க்கரைராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments