சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள பி.திருவேங்கிடபுரத்தைச் சோ்ந்தவா் மாரிச்செல்வம் (27). கட்டடத் தொழிலாளியான இவா், 16 வயது சிறுமியை திருமணம் செய்தாா். இதுகுறித்து சிவகாசி கிராம நல அலுவலா் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மணிமாலா பி.திருவேங்கிடபுரத்துக்கு சென்று விசாரித்தபோது, மாரிச்செல்வம் சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது.
Advertisement
Advertisement
இதுகுறித்து மணிமாலா சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் மாரிச்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.