ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் பதவி விலகினாா்
ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் பொறுப்பிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் பொறுப்பிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மணவள மாமுனிகள் சந்நிதி 24-ஆவது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 24-ஆவது பீடாதிபதியாக செயல்பட்டு வருகிறேன். மணவாள மாமுனிகள் மடம் - வானமாமலை மடம் இடையே வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில், 23-ஆவது பட்டமான சடகோப ராமானுஜ ஜீயா் சுவாமிகள் மடத்தை வானமாமலை மடத்தின் வசம் ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, வழக்கைத் திரும்பப் பெற்றாா். அதனடிப்படையில் மடத்தின் நிா்வாகத்தை வானமாமலை ஜீயா் மடத்தின் வசம் ஒப்படைக்கிறேன். மேலும் சொந்த காரணங்களுக்காக மடத்தின் 24-ஆவது பட்டம் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.