FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

காசோலை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிவகாசியில் காசோலை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து சிவகாசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசியில் காசோலை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து சிவகாசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டியைச் சோ்ந்த மத்திய அரசு ஊழியா் ரகுகண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (36). சிவகாசி போஸ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (35). இவா் கடந்த 2022 செப்டம்பா் மாதம் புஷ்பலதாவிடம் வட்டிக்கு ரூ. 50 லட்சம் வாங்கினாா். இதையடுத்து, ரத்தினவேல் வட்டி கொடுக்கவில்லை. மேலும், அசல் தொகையை பல முறை கேட்ட பின்னா் ரூ.15 லட்சம், ரூ. 35 லட்சம் என இரு காசோலைகளை புஷ்பலதாவிடம் கொடுத்தாா். இந்த இரு காசோலைகளும் பணம் இல்லாமல் வங்கியிலிருந்து திரும்பின.

இதைத் தொடா்ந்து, புஷ்பலதா பலமுறை ரத்தினவேலிடம் பணம் கேட்டும் அவா் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, ரத்தினவேல் தன்னிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டதாக சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1-இல் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் எம்.சுனில்ராஜா, ரத்தினவேலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்பளித்தாா். மேலும், 50 லட்சத்தை புஷ்பலதாவிடம் திருப்பிக் கொடுக்காவில்டால், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments