மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கீழப்பொட்டல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் இருளப்பன் (75).
இவரது மகன் ஆனந்த் (37). ஆனந்துக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
ஆனந்த் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு, அடிக்கடி தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வந்த ஆனந்த், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டாா். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆனந்த் இரும்புக் கம்பியால் தாக்கியதில் இருளப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.