மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை இரவு வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மணக் கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிவாசாரியா்கள் மாலை மாற்றி திருக்கல்யாணம் செய்து வைத்தனா்.
Advertisement
Advertisement
இதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
8-ஆம் நாளான வருகிற வெள்ளிக்கிழமை தேரோட்டமும், 30-ஆம் தேதி தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தேவி, ஆய்வா் முத்து மணிகண்டன் ஆகியோா் செய்தனா்.