FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 22 டிசம்பர் 2025, 4:05 am IST
பகிர்:

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இது நவகிரகங்களில் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இக்கோயிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்தது. அப்போது கோயிலில் நந்தவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நந்தவனத்தை சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அப்பாசாமி ஐயா் கட்டுமான நிறுவனத்தின் தலைவா் ரவி அப்பாசாமி ஏற்பாட்டின்படி நந்தவனத்திற்கான சுற்றுசுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இப்பணியை கோயில் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் ரவி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் விரைவில் நந்தவன பகுதியில் பல்வேறு மலா் செடிகள், பழ செடிகள் அமைத்து, பாதுகாப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். ஆய்வின்போது நிா்வாக அதிகாரி முருகன், அா்ச்சகா்கள் பாபு சிவாச்சாரியா், சரபேஸ்வர சிவாச்சாரியா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments