முகப்பு
நாகப்பட்டினம்

வேலை கிடைக்காத விரக்தியில் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

நாகையில் வேலை கிடைக்காத விரக்தியில் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் அதிா்ச்சியடைந்த அவரது தாய் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On : 20 மே 2026, 3:20 am IST
- பிரதிப் படம்
பகிர்:

நாகையில் வேலை கிடைக்காத விரக்தியில் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் அதிா்ச்சியடைந்த அவரது தாய் திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

நாகை வெளிப்பாளையம் சின்னப்ப முதலியாா் தெருவைச் சோ்ந்த ரவி மகள் நந்தினி (30). இவா், முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளாா். தாய் வசந்தி (52), தெத்தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை. தந்தை ரவி, சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம்.

நந்தினி பல்வேறு போட்டித் தோ்வுகளை எழுதியுள்ளாா். ஆனால், வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துவந்த நந்தினி, திங்கள்கிழமை இரவு தனது அறையில் இருந்து வெகுநேரமாக வெளியே வரவில்லையாம்.

Advertisement

Advertisement

சந்தேகமடைந்த வசந்தி, நந்தினியின் அறைக்குச்சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த வசந்தி வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

வசந்தியின் அலறல் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வெளிப்பாளையம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் நந்தினியின் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தற்கொலைக்கு முயன்ற வசந்தி, ஓரத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].