அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர ஆக.31-இல் சிறப்பு கலந்தாய்வு
திருப்பட்டினம் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர வரும் 31-ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
திருப்பட்டினம் அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர வரும் 31-ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : திருப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) 10-ஆம் வகுப்பு முடித்த மாணவியர் தொழில் பயிற்சியில் சேர்வதற்கு 30 இடங்களும், 8-ஆம் வகுப்பு முடித்த மாணவியருக்கான 21 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு வரும் 31-ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும் 31-ஆம் தேதிக்குப் பின் நிலையத்தில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பின், இடஒதுக்கீடு தளர்த்தப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள அனைத்து இடங்களுக்கும் 31-ஆம் தேதி மாலைஅரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உடனடி அனுமதி நடைபெறும். இதுவரை விண்ணப்பிக்காத அனைத்துப் பிரிவு மாணவிகளும் சிறப்பு ஏற்பாட்டில் பங்குபெற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.