FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
பகிர்:

காரைக்கால் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவா் கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (66). இவா், செவ்வாய்க்கிழமை திருநள்ளாறு பகுதிக்கு கூலி வேலைக்கு வந்துள்ளாா்.

அங்கிருந்து தக்களூா் பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த கனரக வாகனம் (கிரேன்) முதியவா் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலையே உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments