FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

அம்பகரத்தூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 3 ஜூன் 2026, 6:32 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த மே 27-ஆம் தேதி அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

அவா் யாா், எந்த ஊரைச் சேந்தவா் என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்தோா் அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்தை 04368-251100 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments