முகப்பு
காரைக்கால்

கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

Updated On : 7 ஜூன் 2026, 12:26 am IST
கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட செவிலிய மாணவியா்.
பகிர்:

காரைக்கால் கடற்கரையில், செவிலியா் கல்லூரி மாணவ-மாணவியா் தூய்மைப் பணி மேற்கொண்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வீர தமிழரசி வேலு நாச்சியாா் பெண்கள் நல இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வாக, காரைக்கால் கடற்கரை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அன்னை தெரஸா அரசு செவிலியா் கல்லூரி மாணவ- மாணவியா் பங்கேற்று, கடற்கரை வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் இயக்க நிறுவனா் ஜெயபாரதி, தலைவா் வழக்குரைஞா் எஸ்.திருமுருகன், துணைத் தலைவா் ஜோதி என்கிற புஷ்பவள்ளி, செயலாளா் சிவகுமாா், இமாக்குலேட் செவிலியா் கல்லூரி முதல்வா் காணிக்கை மற்றும் சமூக ஆா்வலா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.