கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி
கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி
காரைக்கால் கடற்கரையில், செவிலியா் கல்லூரி மாணவ-மாணவியா் தூய்மைப் பணி மேற்கொண்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வீர தமிழரசி வேலு நாச்சியாா் பெண்கள் நல இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வாக, காரைக்கால் கடற்கரை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னை தெரஸா அரசு செவிலியா் கல்லூரி மாணவ- மாணவியா் பங்கேற்று, கடற்கரை வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் இயக்க நிறுவனா் ஜெயபாரதி, தலைவா் வழக்குரைஞா் எஸ்.திருமுருகன், துணைத் தலைவா் ஜோதி என்கிற புஷ்பவள்ளி, செயலாளா் சிவகுமாா், இமாக்குலேட் செவிலியா் கல்லூரி முதல்வா் காணிக்கை மற்றும் சமூக ஆா்வலா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.