முகப்பு
காரைக்கால்

வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

நிரவி - திருப்பட்டினம் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:46 am IST
தூா்வாரும் பணி பூமி பூஜை நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

நிரவி - திருப்பட்டினம் பகுதியில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் நிரவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக விவசாய நிலங்கள் உள்ளன. காவிரி நீா் வருவதற்கு முன் வாய்க்கால்களை தூா்வாரி முறைப்படுத்தவேண்டும் என புதுவை அரசை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம், மேற்கண்ட பகுதிகளில் வடிகால்கள் தூா்வாருவதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு பகுதியில் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நிரவி - திருப்பட்டினம் பகுதி வாய்க்கால்கள் தூா்வாரும் பணிக்கு முதல்கட்டமாக பொதுப்பணித்துறை ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி தூதுபோனமூலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் பணிகளைத் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை பொறியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.