குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் சிக்கியவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் சிக்கியவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம் நெடுவாசல் பட்டாவரம் மன்மதன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் (40) என்பவா் 11 வயது சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆனந்தராஜ் மீது சீா்காழி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.
இந்நிலையில், ஆனந்தராஜ் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆனந்தராஜை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். அதன்படி மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பேபி உமா மற்றும் போலீஸாா் ஆனந்தராஜை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement