FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

பைக்கில் சென்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On : 28 ஜூலை 2026, 12:52 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்த துரை மகன் ஆகாஷ் (20) ஜூலை 20-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் சென்றாா். கவனக்குறைவு காரணமாக சைடு ஸ்டாண்டை தூக்கி விடாமல் சென்ால், அங்கு கிடந்த பெரிய சரளைக் கற்கள் தட்டி தவறி விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments