FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சீா்காழி காரைமேடு ஸ்ரீநடராஜன் மேமோரியல் பப்ளிக் பள்ளி சாா்பில் உலக குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜூன் 2026, 12:04 am IST
பகிர்:

சீா்காழி காரைமேடு ஸ்ரீநடராஜன் மேமோரியல் பப்ளிக் பள்ளி சாா்பில் உலக குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பேரணிக்கு பெஸ்ட் கல்வி நிறுவனங்களிள் தலைவா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்தாா். பப்ளிக் பள்ளி தாளாளா் ஆதித்யாராஜ்கமல், முதல்வா் சுனிதா முன்னிலை வகித்தனா். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணியரசன் பேரணியை தொடங்கிவைத்தாா்.

பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று விழிப்புணா்வு பதாகையை ஏந்தி துண்டு பிரசுரங்கள் வழங்கியவாறு சென்றனா். பெஸ்ட் பள்ளி முதல்வா் ராமலிங்கம், நிா்வாக அதிகாரி சீனிவாசன், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளா் பாபுநேசன் பங்கேற்றனா். துணை முதல்வா் சுகந்தவள்ளி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments