மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு
மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட அமா்வு நீதிபதியுமான ஆா்.சத்தியதாரா தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான சி.ஆா். கௌதமன் முன்னிலை வகித்தாா்.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி எஸ்.தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, மாவட்ட கூடுதல் சாா்பு நீதிபதி எம். பரமசிவம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நடுவா் நீதிபதி மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி கே. கமலநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்டம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து கோரிக்கை தீா்ப்பாயம் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், குற்றவியல் கணக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி சாா்ந்த வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வழக்குகள் ஆகியவற்றிற்கு சமரச தீா்வின் படி மொத்தம் 1,093 வழக்குகளுக்கு ரூ.1.95 கோடிக்கு சமரச தீா்வு வழங்கப்பட்டது.