முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரத்தில் யானை மீது திருமுறை வீதியுலா

Updated On : 1 ஜூன் 2026, 1:18 am IST
தருமபுரம் ஆதீனத்தில் யானை மீதேற்றி நடைபெற்ற திருமுறை வீதியுலாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு யானை மீது திருமுறை வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருமுறை விழா நடைபெற்றது. விழாவையொட்டி, ஞானபுரீஸ்வரா் கோயிலில் நடராஜா் சந்நிதி அருகில் பாதுகாக்கப்பட்டு வரும் பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, திருமுறைகள், கோயில் யானை ஞானாம்பிகை மீதேற்றப்பட்டு, ஆதீனத்தின் சிவம்பெருக்கும் நான்கு வீதிகளின் வழியே வீதியுலா நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.