இரட்டை காளியம்மன் கோயிலில் விடையாற்றி உத்ஸவம்
நாகை மாவட்டம், சீர்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் விடையாற்றி உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீர்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் விடையாற்றி உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதை முன்னிட்டு இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல வண்ண மலர்கள், வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, உத்ஸவ மூர்த்தி இரட்டை காளியம்மன் ஊஞ்சலில் சிறப்பு வளையல் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.