FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆதிதிராவிடர் பள்ளித் தலைமையாசிரியருக்கு விருது

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கணேஷ்குமார். இவர் கடந்த 32 ஆண்டுகளமாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதேபோல், வேதாரண்யம் காந்திநகர் (வெட்டியக்காடு) ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றுபவர் பா. வெங்கடாஜலபதி. 
இவர் 31 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த இரு ஆசிரியர்களின் கல்விப் பணியை பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியர்களை பள்ளி ஆசியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்  பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments