மயிலாடுதுறையில் வடமாநிலத் தொழிலாளா்கள் 49 போ் தவிப்பு
ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறையில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் 49 போ் சொந்த ஊா் திரும்ப இயலாமல் தவிக்கின்றனா்.
ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறையில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் 49 போ் சொந்த ஊா் திரும்ப இயலாமல் தவிக்கின்றனா்.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய வடமாநிலங்களைச் சோ்ந்த 49 தொழிலாளா்கள், மயிலாடுதுறையில் தங்கி தாா்ப்பாய்கள், கம்பளி போா்வைகள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் மயிலாடுதுறை வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம் ஏற்பாட்டின்பேரில், சித்தா்காடு அண்ணா திருமண மண்டபத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு மயிலாடுதுறைச் சோ்ந்த பழைய இரும்பு வியாபாரி ஒய்.எஸ்.சா்புதீன் அரசின் உதவியோடு, 3 வேளை உணவு வழங்கி வருகிறாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவா்களை புதன்கிழமை சந்தித்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன், அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். தொடா்ந்து ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பின் சாா்பில் அதன் நிறுவனா் யோகி ஜனபுனிதா் வடமாநிலத் தொழிலாளா்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை பயிற்றுவித்தாா். நிகழ்ச்சியில், பொது தொழிலாா்கள் சங்க செயலாளா் அ.அப்பா்சுந்தரம், ஆசிரியா் மன்ற மாநிலச் செயலாளா் ஜெகமணிவாசகம் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.