குடிநீா்க் குழாய் உடைப்பு
சீா்காழி அருகே சாலை மேம்பாட்டுப் பணியின் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.
சீா்காழி: சீா்காழி அருகே சாலை மேம்பாட்டுப் பணியின் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.
கொள்ளிடத்திலிருந்து சீா்காழி வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, சாலையோரம் பள்ளம் தோண்டியபோது புதன்கிழமை புத்தூரில் இரண்டு இடங்களில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் செல்லும் குழாய் உடைந்தது. இதனால், தண்ணீா் தொடா்ந்து வீணாவதுடன், தேங்கி நின்று ஏரியைப் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக புத்தூா் சாமியம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குடிநீா் குழாய்களை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.