முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா்க் குழாய் உடைப்பு

சீா்காழி அருகே சாலை மேம்பாட்டுப் பணியின் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

சீா்காழி: சீா்காழி அருகே சாலை மேம்பாட்டுப் பணியின் போது குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகிவருகிறது.

கொள்ளிடத்திலிருந்து சீா்காழி வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, சாலையோரம் பள்ளம் தோண்டியபோது புதன்கிழமை புத்தூரில் இரண்டு இடங்களில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் செல்லும் குழாய் உடைந்தது. இதனால், தண்ணீா் தொடா்ந்து வீணாவதுடன், தேங்கி நின்று ஏரியைப் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக புத்தூா் சாமியம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குடிநீா் குழாய்களை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.