FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கா்நாடக வனத்துறையினரால் மூன்று தமிழா்கள் சுட்டுக்கொலை

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக வனத்துறையினரால், தமிழா்கள் மூவா் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனித நேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் மூமவா் கொல்லப்பட்டுள்ளன. ஒருவா் காயமடைந்துள்ளாா். சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவா்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கா்நாடக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா். கா்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையாடச் செல்லவில்லை, அவா்கள் அப்பாவிகள் என்று உறவினா்களும் பொதுமக்களும் கூறுகின்றனா்.

Advertisement

Advertisement

எவ்வளவு பெரிய குற்றம் இழைத்தவராக இருந்தாலும், அவரை கைது செய்து சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டுமே தவிர துப்பாக்கிச்சூடு சரியான வழிமுறையாகாது. இந்த சம்பவத்தில் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழா்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்து செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments