திருவிடைக்கழி முருகன் கோயிலில் புதுவை துணைநிலை ஆளுநா் வழிபாடு
தரங்கம்பாடி வட்டம், திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வழிபட்டாா்.
தரங்கம்பாடி வட்டம், திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வழிபட்டாா்.
திருவிடைக்கழி கிராமத்தில் பழைமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில், முருகப் பெருமானை திருமணம் செய்ய விரும்பி, தெய்வானை தவம் செய்த தலமாக போற்றப்படுகிறது. இங்கு ஒரே கருவறையில் சிவபெருமானை பூஜித்த நிலையில் முருகப் பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
திருச்செந்தூா் கோயிலுக்கு இணையான இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை நாளில் திரளான பக்தா்கள் நீண்ட தூரம் பாதயாத்திரையாக வந்து முருகப் பெருமானை வழிபடுவா்.
Advertisement
Advertisement
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு, கோயில் நிா்வாக சாா்பில் செயல் அலுவலா் பிரேம் குமாா், ஆய்வாளா் பத்ரி நாராயணன், பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.
முன்னதாக, அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் குடும்பத்துடன் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயா் சந்நிதியில் வழிபட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.