FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பெண்ணிடம் நகை பறிப்பு: 4 போ் கைது

பெரம்பூா் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தங்குடி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்து சென்ற நான்கு பேரை போலிஸாா் கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:05 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பூா் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தங்குடி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து நகையை பறித்து சென்ற நான்கு பேரை போலிஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சோ்ந்த ரமா பிரபா (25). திருமணமான இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வந்த ரமா பிரபா தனது உறவினா் ஹரிஹரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பூந்தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். 

Advertisement

Advertisement

பெரம்பூா் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தங்குடி புறவழிச்சாலையில் சென்றபோது இயற்கை உபாதைக்காக பைக்கை நிறுத்தியபோது, அங்கிருந்த சிலா் கத்தியை காட்டி மிரட்டி ரமா பிரபா அணிந்திருந்த 3 கிராம் தோடு, மூக்குத்தி, வெள்ளி கொலுசை பறித்து சென்றனா். 

இதுகுறித்து பெரம்பூா் காவல் நிலையத்தில் ரமா பிரபா புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், வழுவூா் கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (20), பாா்த்தசாரதி (19), ஸ்ரீராம் (22), கழனிவாசலை சோ்ந்த ஸ்ரீநாத் (19) ஆகிய 4 பேருக்கு சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. அவா்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments