முகப்பு
நாகப்பட்டினம்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 6:49 am IST
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட காவல்துறையின் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சாா்பில், சிஎஸ்ஐ பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் தலைமை வகித்தாா். நிகழ்வில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள் தடுப்பு, இணையவழி குற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, குழந்தைகள் யாசகம் பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணா்வு தலைப்புகளில் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், மாணவா்கள் சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படவும், சட்ட விழிப்புணா்வை வளா்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனா்.