FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மே 2026, 5:43 am IST
நாகையில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை வட்டச் செயலா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் விளக்க உரையாற்றினாா். மாவட்ட தலைவா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்புரை ஆற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் நிறைவுறையாற்றினாா்.

வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்ட பொருளாளா் குமரன் நன்றி உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை வாபஸ் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments