கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வேளாங்கண்ணி அருகே கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாகை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வேளாங்கண்ணி அருகே கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
வேளாங்கண்ணி அருகேயுள்ள வடவூா் தென்பாதியைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மகன் சுந்தரபாண்டியன் (29). கட்டுமானத் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (35) என்பவருக்கு ரூ.10,000 கடன் கொடுத்துள்ளாா். கடந்த 2021 மே 14 -ஆம் தேதி கடனை திருப்பிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. சுந்தரபாண்டியன் தாக்கியதில் குமாா் உயிரிழந்தாா்.
வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை நாகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில், சுந்தரபாண்டியன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி முகமது பாரூக் தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.