FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு: 3 பெண்கள் கைது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குன்னலூர் மேச்சேத்தியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர்க்கொடி. இவர் திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மலர்க்கொடி அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர்கள் மூவரும் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மனைவி தேவி (32), விக்னேஷ் மனைவி சாதனா (23) மற்றும் பழனியம்மாள் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூவரும் பேருந்தில் மலர்க்கொடியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments