பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு: 3 பெண்கள் கைது
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
குன்னலூர் மேச்சேத்தியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர்க்கொடி. இவர் திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மலர்க்கொடி அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர்கள் மூவரும் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மனைவி தேவி (32), விக்னேஷ் மனைவி சாதனா (23) மற்றும் பழனியம்மாள் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூவரும் பேருந்தில் மலர்க்கொடியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.