பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருவெண்ணெய்நல்லூா் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், காந்திகுப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் வைத்தீஸ்வரன்(16). காந்திகுப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த வைத்தீஸ்வரன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.