முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே உள்ள முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே உள்ள முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கஞ்சிவார்த்தலும் நடைபெற்றது. இரவு அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாகசுர மற்றும் கிராமிய இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், வர்த்தகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர்.
நீடாமங்கலம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.