இறகுப்பந்து போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு
திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா்: திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் நகராட்சி உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட இறகுப்பந்து கழகமும், நகராட்சி இறகுப்பந்து கழகமும் இணைந்து மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியை நடத்தியது. இப்போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டியில் 25- க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில், நகராட்சி அணியும், பாஸ் அணியும் மோதின. இதில் நகராட்சி அணியின் இணையதுல்லா, முகேஷ் இணை வெற்றி பெற்றனா். பாஸ் அணியின் முகமது காமில், மணிகண்டன் இணை இரண்டாமிடமும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, முகமது தவ்ஹித் இணை மூன்றாமிடமும் பெற்றன.
Advertisement
Advertisement
பிறகு, திருவாரூா் மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவா் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை பரிசுகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், இறகுப்பந்து கழக துணைத் தலைவா் முருகவேல், செயலாளா் ஜோதி பாஸ்கரன், பொருளாளா் முஹம்மது இத்ரீஸ் உட்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.