பாமணியாற்றில் அடையாளம் தெரியாத சடலம்
நீடாமங்கலம் அருகே பாமணியாற்றில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா்.
நீடாமங்கலம் அருகே பாமணியாற்றில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா்.
நீடாமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட சித்தமல்லி ஊராட்சி வெள்ளங்குழி சாலை அருகே பாமணியாற்றில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதந்துவந்து புதன்கிழமை கரை ஒதுங்கியது. தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.