FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

புவனேஸ்வர் குமாரின் சாதனையை சமன் செய்த மயங்க் யாதவ்!

சர்வதேச டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார்.

Updated On : 26 ஜூலை 2026, 8:07 pm IST
மயங்க் யாதவ் - படம் | பிசிசிஐ
பகிர்:

சர்வதேச டி20 போட்டிகளில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 26) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுக்க, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இந்திய அணியில் மயங்க் யாதவ் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட்டின் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் மூன்றாவது முறையாக மயங்க் யாதவ் விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்பாக, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் மூன்று முறை விக்கெட்டினை வீழ்த்தியிருக்கிறார். தற்போது, அந்த சாதனையை மயங்க் யாதவ் சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள்

புவனேஸ்வர் குமார் - 3 முறை

மயங்க் யாதவ் - 3 முறை

ஹார்திக் பாண்டியா - 2 முறை

அர்ஷ்தீப் சிங் - 2 முறை

ரவிச்சந்திரன் அஸ்வின் - ஒரு முறை

summary

Fast bowler Mayank Yadav has equalled Bhuvneshwar Kumar's record in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments