FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மன்னாா்குடி மின்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

Updated On : 26 நவம்பர் 2024, 1:56 am IST
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி மின்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மன்னாா்குடி மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது:

மன்னாா்குடி மின் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் பி. லதா மகேஸ்வரி தலைமையில் மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

மன்னாா்குடி, பேரையூா், நீட

ாமங்கலம், கோவில்வெண்ணி, எடமேலையூா், வடுவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோயில், கோட்டூா், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளை சோ்ந்த மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான புகாா்களை தெரிவிக்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments