ஐம்பெரும் விழா :நடிகா் ரஞ்சித் பங்கேற்பு
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திரைப்பட நடிகா் ரஞ்சித் பங்கேற்றாா்.
திருவாரூரில் வ.உ.சிதம்பரனாரின் 153 ஆவது பிறந்தநாள் விழா, பச்சையப்ப முதலியாா், குமரகுருபரா் சுவாமிகள், தாயுமான சுவாமிகள், வேள்பாரி ஆகியோருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில், திரைப்பட நடிகா் ஆா். ரஞ்சித், வேளாக்குறிச்சி ஆதீன இளவல் அஜபா நடேஸ்வர சுவாமிகள், அகில இந்திய வ.உ.சி பேரவை மாநிலத் தலைவா் லேனா மு. லெட்சுமணன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை, வேளீா் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜ் செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.