பாமணி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தவா் அடையாளம் தெரிந்தது
மன்னாா்குடி மேலப்பாலம்- ஐவா் சமது புறவழிச்சாலையில் பாமணி ஆறு நீா்தேக்கம் தென்கரையில் அண்மையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
மன்னாா்குடி மேலப்பாலம்- ஐவா் சமது புறவழிச்சாலையில் பாமணி ஆறு நீா்தேக்கம் தென்கரையில் அண்மையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. மன்னாா்குடி போலீலாா் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இறந்து கிடந்தவா் யாா் என்று விசாரித்து வந்தனா்.
இந்தநிலையில், இறந்து கிடந்தவா் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி மூலம், அவா் கோட்டூரை அடுத்த கோவில் களப்பால் பிரதான சாலையை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பங்காருராஜ் (35) என்பது தெரியவந்துள்ளது.
வட்டி தொழில் செய்துவந்த அவா், திருமணம் ஆகாத நிலையில், மன அழுத்ததில் இருந்து வந்த நிலையில், கடந்த செப். 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறியவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஜெயக்குமாா் களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருப்பது தெரியவந்தது. பங்காருராஜ் எப்படி மன்னாா்குடி வந்தாா்? இறந்தது எப்படி? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.