FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பல்கலை. தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.

Updated On : 26 டிசம்பர் 2025, 1:45 am IST
திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.
பகிர்:

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.

திருவாரூா், டிச. 25: திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், பல்கலைக்கழக தரவரிசை பெற்றவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் கோ.தி.விஜயலெட்சுமி வரவேற்றாா். கல்லூரியின் செயலா் பெரோஷ்ஷா தலைமை வகித்து, 7 தங்கப் பதக்கம் உள்பட தரவரிசையில் இடம்பெற்ற 57 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஷ், துணை முதல்வா்கள், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள், மாணவிகள் பங்கேற்றனா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ச.வசுந்தரா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments