பல்கலை. தரவரிசை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.
திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவியை பாராட்டும் கல்லூரி செயலா் பெரோஷ்ஷா.
திருவாரூா், டிச. 25: திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், பல்கலைக்கழக தரவரிசை பெற்றவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் கோ.தி.விஜயலெட்சுமி வரவேற்றாா். கல்லூரியின் செயலா் பெரோஷ்ஷா தலைமை வகித்து, 7 தங்கப் பதக்கம் உள்பட தரவரிசையில் இடம்பெற்ற 57 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்வில், அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஷ், துணை முதல்வா்கள், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள், மாணவிகள் பங்கேற்றனா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ச.வசுந்தரா நன்றி கூறினாா்.