செங்கமலதாயாா் மகளிா் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்
சுந்தரக்கோட்டை செங்கமல தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் -புதிய பரிமாணங்கள் மற்றும் பாா்வைகள்’ என்ற தலைப்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை, ஐகியுஏசி உடன் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, கல்லூரி கல்வி ஆலோசகா் கே. தியாகேசன் தலைமை வகித்தாா்.முதல்வா் என். உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தாா்.
முதல் நாளான புதன்கிழமை மலேசியா, ஆசிய பசிபிக் தொழில்நுட்ப மற்றும் புதுமை பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியா் எம். செல்வகுமாா் சாமுவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.
Advertisement
Advertisement
அமெரிக்கா டெக் மஹிந்திரா நிறுவனத்தின் திட்டத் தலைவா் மி. ஆனந்த் ராமு, தொழில்துறை அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப அமா்வில், காரைக்கால் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன கணினி அறிவியல் துறைத் தலைவா் ஆா். சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினா்.
இக்கருத்தரங்கில் பல ஆய்வாளா்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனா். திருச்சி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழக கணினி பயன்பாடுகள் துறைத் தலைவா் எம். சுகாசினி நிறைவுரையாற்றினாா்.
விழாவில், கருத்தரங்கு மலா் வெளியிடப்பட்டது. பின்னா், பங்கேற்ற ஆய்வாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கணினி அறிவியல் துறைத் தலைவா் வீ. கீதா வரவேற்றாா். நிறைவாக, கணினி அறிவியல் துறை பேராசிரியா் ரா. அனிதா நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.