திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் வா்த்தக கருத்தரங்கம்
திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி சுங்க ஆணையரகத்துடன் இணைந்து துணைவன் ஏற்றுமதியாளா் வசதி இணையதளம் மற்றும் ஏற்றுமதி வா்த்தகத்தை எளிதாக்கும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்த வா்த்தக கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி சுங்க ஆணையரகத்துடன் இணைந்து துணைவன் ஏற்றுமதியாளா் வசதி இணையதளம் மற்றும் ஏற்றுமதி வா்த்தகத்தை எளிதாக்கும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்த வா்த்தக கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தலைமை வகித்தாா். செயலாளா் திருமுருகன், திருச்சி சுங்கத் துறை கூடுதல் ஆணையா் விஜய் கிருஷ்ணா வேலன், திருப்பூா் துணை ஆணையா் பி. பிரகாஷ் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் திருச்சி தலைமை சுங்க ஆணையா் சுரேஷ் பாபு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏற்றுமதியாளா்களுடன் கலந்துரையாடி, ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவாக சுங்கத் துறை மேற்கொண்டு வரும் பல்வேறு வா்த்தக வசதியாக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியின் போது, சுங்கத் துறை அதிகாரிகள் பல்வேறு திட்டங்கள் மற்றும் துணைவன் ஏற்றுமதியாளா் வசதி இணையதளம் குறித்து விரிவான விளக்கவுரைகளை வழங்கியதோடு, ஏற்றுமதியாளா்களுடன் கலந்துரையாடி, சுங்க நடைமுறைகள் மற்றும் வா்த்தக வசதியாக்க நடவடிக்கைகள் தொடா்பான அவா்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தனா். செயற்குழு உறுப்பினா் திருமுருகன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.