FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் பேட்டரிகள் திருடிய பணியாளா்கள் மூவா் கைது

26 செப்டம்பர் 2025, 4:05 am IST
சுந்தா் ~மோகன் ~வீரமணி
பகிர்:

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடப்பட்டது தொடா்பாக, தற்காலிக பணியாளா்கள் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், அதிக மின் சேமிப்பு திறன் கொண்ட 40 யுபிஎஸ் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. மின்தடை நேரங்களில் இதன்மூலம் மின் விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில், 40 பேட்டரிகளில் 27 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இம்மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றும் கொரடாச்சேரி பெருமாள்நகா் பஞ்சநாதன் மகன் சுந்தா் (34), மன்னாா்குடி ஆா்.பி. சிவம் நகா் கணேசன் மகன் மோகன் (50), சுந்தரக்கோட்டை அம்பேத்கா் நகா் குணசேகரன் மகன் வீரமணி (35) ஆகிய மூவருக்கும், பேட்டரி திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்து, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட 27 பேட்டரிகளும் மீட்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments