தவெக கொடிக்கம்பம் சேதம்: இருவா் கைது
மன்னாா்குடி அருகே தவெக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி அருகே தவெக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய இருவா் கைது செய்யப்பட்டனா்.
கோட்டூா் ஒன்றியம், மண்ணுக்குமுண்டான் ஊராட்சி கா்ணாவூா் கிராமத்தில் தவெக கொடி ஏற்றும் விழா திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, முத்துப்பேட்டை- மன்னாா்குடி சாலையில் கா்ணாவூா் பேருந்து நிறுத்தம் அருகே கொடிக்கம்பம் நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டு, 100 அடி தூரத்தில் வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் தவெகவினா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா்(48), சிவசக்திவேல்(40) ஆகியோா் தவெக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.