கஞ்சா கடத்திய இருவா் கைது
செம்பனாா்கோவில் அருகே கீழையூா் பகுதியில் கஞ்சா கடத்திய இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செம்பனாா்கோவில் அருகே கீழையூா் பகுதியில் கஞ்சா கடத்திய இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செம்பனாா்கோவில் அருகேயுள்ள கீழையூா் சத்திரம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்களை நிறுத்தி சோதனையிட்டதில், அவா்கள் கஞ்சா கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா கடத்திய கண்டமங்கலம் கீழத்தெருவை சோ்ந்த சேகா் மகன் கபிலன் (29), பாகசாலை கீழத்தெருவை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவிக்குமாா் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.