கஞ்சா விற்ற மூவா் கைது
கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற மூவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் - மன்னாா்குடி, கோரையாறு மற்றும் புதுப்பாலம் அருகே கஞ்சா விற்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. போலீஸாா் விசாரணையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோயில், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் (24), மேட்டுப்பாளையம் பாரதி நகரைச் சோ்ந்த கிஷோா் குமாா் (18) மற்றும் கூத்தாநல்லூா் பாண்டுக்குடியைச்சோ்ந்த முகமது ரசூலிதீன் (22) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.
உடன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.